கோவை அருகே வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், குப்பைகள் - தொற்று நோய் பரவும் அபாயம்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்படுவதாகவும், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


கோவை: கோவை ஜி எம் நகர் கோட்டை புதூர் அருகே வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கோயம்புத்தூர் சிங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டு, ஜி எம் நகர் கோட்டை புதூர் பின்புறம் உள்ள பகுதியில் வீசி எறியப்படும் இறைச்சி கழிவுகள், இறந்து கிடக்கும் நாய்கள், குப்பைகள் என அனைத்தும் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுகின்றது.



மேலும், அங்கு குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை தொட்டிகளும் இல்லை. குப்பைகளை அப்புறப்படுத்துவதும் இல்லை. பல மாதங்களாக அப்பகுதியில் இதே நிலை தொடர்ந்து வருகின்றது.



இதன் காரணமாக கொசுத் தொல்லை மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமப்படுகின்றனர். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று குற்றம்சாட்டினர்.



எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சனைக்கு செவிசாய்க்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...