கோவை: கோவையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனம், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனம், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், வெள்ளமடை மஜரா சாமநாயக்கன்பாளையத்தில் இரு சக்கர வாகன உதிரிப் பாகம் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது.
இங்கு பணியாற்றிய 26-பேரில், ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொடிசியா சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனத்துக்கு, 10-ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுவனத்தை இயக்கக்கூடாது என்று உத்தரவிட்டு,
பூட்டி சீல் வைக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள், அங்காடிகளைத் தணிக்கை செய்யப் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.