கோவை மாநகராட்சி பகுதியில் செப்டிக் டேங்க் நிறைந்து கழிவு நீர் இரண்டு நாட்களாக ஓடும் அவலம்; மக்கள் கடும் அவதி

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் இரண்டு நாட்களாக செப்டிக் டேங்க் நிறைந்து, சாலையில் சாக்கடை நீர் ஆறு போல ஓடிக் வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் இரண்டு நாட்களாக செப்டிக் டேங்க் நிறைந்து, சாலையில் சாக்கடை நீர் ஆறு போல ஓடிக் வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கோவை 72 -வது வார்டுக்கு உட்பட்ட இமானுவேல் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஹெட் குவார்ட்டர்ஸ் ரோடு பகுதியில் சாலையின் மேல் பகுதியில் உள்ள செப்டிக்டேங் நிறைந்து இரண்டு நாட்களாக தண்ணீர் சாலைகளில் ஆறு போல ஓடிக் கொண்டுள்ளது.



அந்த பகுதியில் நடக்கக்கூடிய நடைபாதை பயணிகள், வாகனத்தில் செல்லக்கூடியவர்கள், என அனைவரும் அதைக் கடந்து மிதித்து செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் தொற்று பரவி வரும் காலத்தில் இது போன்ற சுகாதாரமற்ற சம்பவங்களினால் அந்த பகுதி முழுவதும் கொசு, ஈ, புழுக்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், புதிய நோய் தொற்றுகள் உருவாக வழிவகுக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் முன், மாநகராட்சி தலையிட்டு உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...