கோவை மாநகராட்சி பகுதியில் செப்டிக் டேங்க் நிறைந்து கழிவு நீர் இரண்டு நாட்களாக ஓடும் அவலம்; மக்கள் கடும் அவதி

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் இரண்டு நாட்களாக செப்டிக் டேங்க் நிறைந்து, சாலையில் சாக்கடை நீர் ஆறு போல ஓடிக் வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலையில் இரண்டு நாட்களாக செப்டிக் டேங்க் நிறைந்து, சாலையில் சாக்கடை நீர் ஆறு போல ஓடிக் வருவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



கோவை 72 -வது வார்டுக்கு உட்பட்ட இமானுவேல் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஹெட் குவார்ட்டர்ஸ் ரோடு பகுதியில் சாலையின் மேல் பகுதியில் உள்ள செப்டிக்டேங் நிறைந்து இரண்டு நாட்களாக தண்ணீர் சாலைகளில் ஆறு போல ஓடிக் கொண்டுள்ளது.



அந்த பகுதியில் நடக்கக்கூடிய நடைபாதை பயணிகள், வாகனத்தில் செல்லக்கூடியவர்கள், என அனைவரும் அதைக் கடந்து மிதித்து செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் தொற்று பரவி வரும் காலத்தில் இது போன்ற சுகாதாரமற்ற சம்பவங்களினால் அந்த பகுதி முழுவதும் கொசு, ஈ, புழுக்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், புதிய நோய் தொற்றுகள் உருவாக வழிவகுக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் முன், மாநகராட்சி தலையிட்டு உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...