கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த கீரி பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்த கீரி பத்திரமாக மீட்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை ஆட்சியர் அலுவலக பழைய கட்டிட வளாகம் அருகே கீரி ஒன்று வந்துள்ளது. அங்குள்ளவர்கள் தகவல் தெரிவிக்கத் தன்னார்வலர்கள் விவேக் மற்றும் சரவணகுமார் ஆகியோர் ஆட்சியர் அலுவலகம் வந்து கீரியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது கீரி ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்திற்குள் புகுந்தது. இதனை அடுத்து புதிய கட்டிடம் தரை தளத்தில் போராடி அந்த கீரி நேற்று இரவு பிடிக்கப்பட்டது. இந்த கீரியைத் தன்னார்வலர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோவை ஆட்சியர் அலுவலக பழைய கட்டிட வளாகம் அருகே கீரி ஒன்று வந்துள்ளது. அங்குள்ளவர்கள் தகவல் தெரிவிக்கத் தன்னார்வலர்கள் விவேக் மற்றும் சரவணகுமார் ஆகியோர் ஆட்சியர் அலுவலகம் வந்து கீரியைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது கீரி ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்திற்குள் புகுந்தது. இதனை அடுத்து புதிய கட்டிடம் தரை தளத்தில் போராடி அந்த கீரி நேற்று இரவு பிடிக்கப்பட்டது. இந்த கீரியைத் தன்னார்வலர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.