வால்பாறையில் சாலையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்.!!

வால்பாறை: வால்பாறையில் சாலையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியை நகராட்சி மேற்கொண்டது.


வால்பாறை: வால்பாறையில் சாலையில் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றும் பணியை நகராட்சி மேற்கொண்டது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி பகுதியில் தினந்தோறும் பல டன் குப்பைக் கழிவுகள் நகராட்சி சுகாதார பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் ஸ்டான் மோர் சாலை பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக நகராட்சிக் குப்பைக் கிடங்கில் வால்பாறை நகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டக் கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக வால்பாறை நகரில் சேகரமாகும் பல டன் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சாலையின் ஓரத்திலேயே கொட்டி வந்தனர்.

இதன்காரணமாக ஸ்டான்மோர் குரங்கு முடி, பழைய வால்பாறை, வரட்டுபாறை, உருளிக்கல் மற்றும் சோலையார் அணை கேரள பகுதிக்குச் செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் இங்கு கொட்டப்படும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு அருகிலுள்ள வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரி நீதிமன்றம் வருபவர்களுக்கும் மேலும் அருகில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் கக்கன் காலனி பகுதியில் குடியிருக்கும் மக்களும் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

இதனை முன்னிட்டு நகராட்சிக்குப் பலமுறை சாலையில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் ஸ்டான்மோர் சாலையில் கொட்டப்பட்ட கழிவுகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணியை நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.



சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டது. மேலும் மாமிசக் கழிவுகள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. ஆணையாளர் நடவடிக்கைக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...