கோவையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது!

கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவையில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை நகரில் பல்வேறு இடங்களில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டுப் போனதை தொடர்ந்து காட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில், கிராஸ்கட் ரோட்டில் ஸ்கூட்டரை திருடியதாக 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் ஊட்டியை சேர்ந்த விஜய் டேனியல் (35), துடியலூரைச் சேர்ந்த சதீஷ் (40), ராகேஷ் (23) ஆகிய 3 பேரும் ஆர்.எஸ்.புரம், துடியலூர், நீலகிரி, ஊட்டி உட்பட பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 2 மோட்டார் சைக்கிள் இரண்டு ஸ்கூட்டர்களை போலீசார் மீட்டனர். கைதான விஜய் டேனியல் ஏற்கனவே இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர். மீண்டும் இதே குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...