கோவையில் தனியார் நிறுவன ஊழியர், கட்டிட தொழிலாளி, ஆகியோர் வீடுகளை உடைத்து நகை-லேப்டாப் திருட்டு.!! மர்ம ஆசாமிகள் கைவரிசை.!!

கோவை: தனியார் நிறுவன ஊழியர், கட்டிடத் தொழிலாளி, ஆகியோர் வீடுகளை உடைத்து நகை லேப்டாப் திருடிய கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.


கோவை: தனியார் நிறுவன ஊழியர், கட்டிடத் தொழிலாளி, ஆகியோர் வீடுகளை உடைத்து நகை லேப்டாப் திருடிய கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை அருகே தனியார் நிறுவன ஊழியர் மற்றும் கட்டிட தொழிலாளி ஆகியோருடைய வீடுகளை உடைத்து உள்ளே சென்று நகை, பணம், லேப்டாப், திருடிய கொள்ளையர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.

கோவை வெள்ளலூர் எல்.ஜி நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (26), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டி சாவியை சூவுக்குள் வைத்து செல்வது வழக்கம்.

இதேபோல் நேற்று வேலை முடிந்து சூவுக்குள் பார்த்தபொழுது சாவி காணவில்லை. ஆனால் வீட்டை பூட்டியபோல் பூட்டை தொங்க விட்டு சென்றுள்ளனர்.

கதவை தொட்டவுடன் திறந்து விட்டது. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரி மற்றும் பீரோவிலிருந்த 15-பவுன் தங்க நகை, வெள்ளி, ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. மர்ம ஆசாமிகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

போத்தனூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை செய்து வருகின்றனா்.

இதேபோல போத்தனூர் அம்மன் புதூரைச் சேர்ந்தவர் வித்தியா (40) கட்டிட தொழிலாளி, இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவு 2-மணியளவில் சத்தம் கேட்டு வித்யா எழுந்து பார்த்தார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே ஓடி பைக்கில் ஏறி தப்பினார். வீட்டிலிருந்த லேப்டாப் செல்போன் 3,000 ரொக்கம் மர்ம ஆசாமி திருடிதப்பி சென்றுள்ளான்.

வித்யா கொடுத்த புகாரின் பேரில் போத்தனூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...