கோவை: பொள்ளாச்சி அருகே தெப்பக்குளம் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 540 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே தெப்பக்குளம் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 540 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு சோதனைகளை போலீசார் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதி அருகே சிலர் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று உதவி ஆய்வாளர் காலேப் தலைமையிலான போலீசார் அங்கு சென்று நடத்திய சோதனையில், மோதிராபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன்(28) என்பவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த 540 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கேரளா லாட்டரிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பல்வேறு சோதனைகளை போலீசார் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி தெப்பக்குளம் வீதி அருகே சிலர் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று உதவி ஆய்வாளர் காலேப் தலைமையிலான போலீசார் அங்கு சென்று நடத்திய சோதனையில், மோதிராபுரம் பகுதியை சேர்ந்த அரவிந்தன்(28) என்பவர், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவரிடம் இருந்த 540 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.