10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியீடு..! ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிப்பு!

கோவை: 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் சற்று முன்பு இணையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.


கோவை: 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ் சற்று முன்பு இணையத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது.

ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவை வருகிற 31ம் தேதி வரை பதிவிறக்கம் செய்ய கால அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020-21 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது.

மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களை தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது. அதேநேரம், உயர்கல்வி சேர்க்கைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், 10-ம் வகுப்புக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று வெளியானது.

இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 23-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

பள்ளிகளும் பதிவிறக்கம்

எனவே, பள்ளி மாணவர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) தங்கள் பதிவு எண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து, மதிப்பெண் சான்றிதழை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், பள்ளிகளும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...