பொள்ளாச்சி: பொள்ளாச்சி சாலையில் அஜாக்கிரதையாக வந்த லாரி சுற்று சுவர் மீது மோதி விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சாலையில் அஜாக்கிரதையாக வந்த லாரி சுற்று சுவர் மீது மோதி விபத்தில் 2-குழந்தைகள் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பொள்ளாச்சி கோட்டூர் ரோடு தங்கம் தியேட்டர் அருகேதனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து நேற்று இரவு நூல் பண்டல் ஏற்றிய லாரி, வால்பாறை சாலை செல்ல ஓட்டுநர் அஜாக்கிரதையாக திருப்பியுள்ளார். அப்போது, லாரியின் பின்புறம் சுற்றுச்சுவர் மீதுமோதியது.

அப்போதுசாலையோரம் இருந்த பேல்பூரி தள்ளுவண்டிகடையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பொதுமக்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொது மக்கள், போலீசாருக்குதகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்குவிரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியோடு,இடிபாடுகளில் சிக்கியிருந்த,4-வயது குழந்தைகள் நித்தீஷ், சிவன்யா, பேல்பூரி கடைகாரர் லக்கி குமார், 14-வயது சிறுவன் கிஷோர்உள்ளிட்ட, 6-பேரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் 1-மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு தங்கம் தியேட்டர் அருகேதனியாருக்கு சொந்தமான இடத்தில் இருந்து நேற்று இரவு நூல் பண்டல் ஏற்றிய லாரி, வால்பாறை சாலை செல்ல ஓட்டுநர் அஜாக்கிரதையாக திருப்பியுள்ளார். அப்போது, லாரியின் பின்புறம் சுற்றுச்சுவர் மீதுமோதியது.
அப்போதுசாலையோரம் இருந்த பேல்பூரி தள்ளுவண்டிகடையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த பொதுமக்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது.
இடிபாடுகளில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த பொது மக்கள், போலீசாருக்குதகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்குவிரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியோடு,இடிபாடுகளில் சிக்கியிருந்த,4-வயது குழந்தைகள் நித்தீஷ், சிவன்யா, பேல்பூரி கடைகாரர் லக்கி குமார், 14-வயது சிறுவன் கிஷோர்உள்ளிட்ட, 6-பேரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் 1-மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.