கோவை: பொள்ளாச்சி அருகே மாமனாரின் கை கட்டை விரலை கடித்த மருமகனை கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே மாமனாரின் கை கட்டை விரலை கடித்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (63). இவரது மகள் சத்யா (25) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சத்யாவிற்கும் மணிமாறனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் நேற்று அவர் தான் தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளார். மனைவியை அழைத்துச் சென்ற கணவர் மணிமாறன் மற்றும் அவருடைய மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் மணிமாறன் மாமனாரின் கை கட்டை விரலை கடித்துள்ளார். இதுதொடர்பாக, பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (63). இவரது மகள் சத்யா (25) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (26) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சத்யாவிற்கும் மணிமாறனுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததால் நேற்று அவர் தான் தந்தை வீட்டுக்குச் சென்றுள்ளார். மனைவியை அழைத்துச் சென்ற கணவர் மணிமாறன் மற்றும் அவருடைய மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் மணிமாறன் மாமனாரின் கை கட்டை விரலை கடித்துள்ளார். இதுதொடர்பாக, பழனியப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.