பொள்ளாச்சி அருகே மரத்திலிருந்து கீழே குதிக்க முயன்ற மனநிலை பாதிக்கப்பட்டவர் மீட்பு - மருத்துவமனையில் அனுமதி!

கோவை: பொள்ளாச்சி அருகே மரத்திலிருந்து கீழே குதிக்க முயன்ற மனநிலை பாதிக்கப்பட்டவரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே மரத்திலிருந்து கீழே குதிக்க முயன்ற மனநிலை பாதிக்கப்பட்டவரை தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ராமபட்டினம் பிரிவில், பழைய காவல்துறை சோதனை சாவடி அருகே நேற்று மரத்தின் மீது ஏறி ஒருவர் கீழே குதிக்கப் போவதாக அச்சுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு துறை அதிகாரிகள் சென்றனர். இதையடுத்து மரத்தின் மீது ஏறி நின்ற நபரிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், அவரை மீட்க முயற்சிகளை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் உதவியோடு தீயணைப்புத்துறை அதிகாரிகள் மரத்தின் அடியில் வலையை விரித்து நின்று கொண்டிருந்தனர். இதே சமயத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் மரத்தின் மீது ஏறி முதியவரை கயிறு கட்டி மீட்டனர்.

விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த துரையன்(55), என்பதும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...