கோவை: வால்பாறையில் சந்தேகத்தால் மனைவியை கட்டையால் கணவன் அடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் சந்தேகத்தால் மனைவியை கட்டையால் கணவன் அடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் LD பகுதியில் தேயிலை தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகா (35). இவருடைய கணவர் கண்ணன் லாரி ஓட்டுநர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மகாவீர், சேகர் உள்ளனர்.
இந்நிலையில், கனகாவின் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இன்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்ணன் தன்னுடைய மனைவி கனகாவை கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் கனகாவின் மண்டை உடைத்து பலத்த காயம் இடதுகை எலும்பு முறிவு ஏற்பட்டது.
அப்போது, கனகாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்குள்ள தனியார் வண்டியில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
பின்னர், மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த உருளிக்கல் எஸ்டேட் LD பகுதியில் தேயிலை தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் கனகா (35). இவருடைய கணவர் கண்ணன் லாரி ஓட்டுநர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் மகாவீர், சேகர் உள்ளனர்.
இந்நிலையில், கனகாவின் மீது சந்தேகமடைந்து அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இன்று மதியம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிய கனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கண்ணன் தன்னுடைய மனைவி கனகாவை கட்டையால் தாக்கியுள்ளார்.
இதில் கனகாவின் மண்டை உடைத்து பலத்த காயம் இடதுகை எலும்பு முறிவு ஏற்பட்டது.
அப்போது, கனகாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், அங்குள்ள தனியார் வண்டியில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
பின்னர், மருத்துவமனை மூலம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.