கோவை கணபதி அருகே பைக் ஷோரூமில் ஜன்னல் கம்பியை அறுத்து ரூ. 1.7 லட்சம் திருட்டு - போலீசார் விசாரணை!

கோவை: கோவை கணபதி பகுதியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.1.7 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை கணபதி பகுதியில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூமில் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.1.7 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-

கோவை கணபதி அடுத்த அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் ஆதி ஹோண்டா ஷோரூம் செயல்பட்டு வருகிறது. இந்த ஷோரூமில் நேற்று முன்தினம் இரவு, விற்பனைத் தொகை ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு சாவியை செக்யூரிட்டி ரகுமான் என்பவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை தூய்மைப் பணியாளர் முருகையா என்பவர் ஷோ ரூம் சேல்ஸ் மேனேஜர் ஸ்ரீராமுவிற்கு செல்போன் மூலம் அழைத்து ஜன்னலின் கம்பிகள் அறுக்கப்பட்டது போல இருப்பதாக கூறினார்.

இதையடுத்து, நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது, ஜன்னல் கம்பி அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும், உள்ளே லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, சேல்ஸ் மேனேஜர் ஸ்ரீராம் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...