திருப்பூர்: உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூர்: உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உடுமலைப்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் கடைகள், ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்டவகையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதாள சாக்கடை அடைக்கப்பட்டுள்ளதால் கழிவு நீர் செல்லும் சாக்கடைகள் அனைத்தும் பயனற்று போனது.
சாக்கடைகளில் குப்பைகள் மற்றும் மணல்கள் சேர்ந்ததால் மழை காலங்களில் மழை நீர் வடியாமல் நகரின் பல பகுதிகளில் தேங்கி விடுகிறது.
இந்த நிலையில், முக்கிய வீதிகளில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து, அதனை மழைநீர் வடிகால் பாதையாக மாற்ற நகராட்சியில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.