கோவை: பொள்ளாச்சி அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது. அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கோவை: பொள்ளாச்சி அருகே கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பெண் குழந்தை பிறந்தது. அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில், வசிக்கும் நிர்மலா தேவி என்ற பெண்ணுக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த நிர்மலா தேவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால், ஊழியர்கள் அவசரம் கருதி ஆம்புலன்சில் நிர்மலா தேவிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், தாய் மற்றும் குழந்தைக்கு, முதலுதவி அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
அவசரம் கருதி ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில், வசிக்கும் நிர்மலா தேவி என்ற பெண்ணுக்கு, நேற்று பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த நிர்மலா தேவியை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி அதிகரித்ததால், ஊழியர்கள் அவசரம் கருதி ஆம்புலன்சில் நிர்மலா தேவிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பின்னர், தாய் மற்றும் குழந்தைக்கு, முதலுதவி அளித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவர்களை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர்.
அவசரம் கருதி ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.