கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக எழும் புகாரின் பேரில், போலீசார் ரெய்டு மூலமாக சமந்தப்பட்ட நபர்களை கைது செய்தும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக எழும் புகாரின் பேரில், போலீசார் ரெய்டு மூலமாக சமந்தப்பட்ட நபர்களை கைது செய்தும், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, கோவை சக்தி ரோடு பகுதியில் கிங்ஸ் கேரளா ஆயுர்வேதிக் வலி நிவாரண மையம் என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு துடியலூர் ரோடு சரவணம்பட்டி பகுதியைச் ராஜேஷ் 33, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருந்த ஒருவர் கூடுதலாக பணம் கொடுத்தால் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று அவரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ், பணம் எடுத்து விட்டு வருவதாக கூறிவிட்டு, சரவணம்பட்டி போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு, சாதாரண உடையில் வாடிக்கையாளர் போல் சென்று விசாரித்தனர். அப்போது, அங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக, தொண்டாமுத்தூர் காந்திஜி காலனி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (34), திருப்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (22) ஆகிய இரண்டு புரோக்கர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த சென்னை கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகிய 3 பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கோவை சக்தி ரோடு பகுதியில் கிங்ஸ் கேரளா ஆயுர்வேதிக் வலி நிவாரண மையம் என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு துடியலூர் ரோடு சரவணம்பட்டி பகுதியைச் ராஜேஷ் 33, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருந்த ஒருவர் கூடுதலாக பணம் கொடுத்தால் இளம் பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று அவரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த லோகேஷ், பணம் எடுத்து விட்டு வருவதாக கூறிவிட்டு, சரவணம்பட்டி போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் அந்த மசாஜ் சென்டருக்கு, சாதாரண உடையில் வாடிக்கையாளர் போல் சென்று விசாரித்தனர். அப்போது, அங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியதாக, தொண்டாமுத்தூர் காந்திஜி காலனி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (34), திருப்பூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி (22) ஆகிய இரண்டு புரோக்கர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அங்கு விபச்சாரத்திற்காக தங்க வைக்கப்பட்டிருந்த சென்னை கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், கிருஷ்ணகிரி மாவட்டம் கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகிய 3 பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.