தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினசரி ஊதியமாக ரூபாய் 426- அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து தி.மு.கவினர் கொண்டாட்டம்.!!

வால்பாறை: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினசரி ஊதியமாக ரூபாய் 426 அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து தி.மு.கவினர் கொண்டாடினர்.


வால்பாறை: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குத் தினசரி ஊதியமாக ரூபாய் 426 அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பட்டாசு வெடித்து தி.மு.கவினர் கொண்டாடினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50-ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு 3-ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூன் மாதமே ஊதிய ஒப்பந்த முடிவுற்ற நிலையில், தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் தொழிற்சங்கங்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதில் எவ்வித முடிவும் எட்டப்படாத இருந்து வந்தது.

இந்நிலையில், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் வால்பாறை நகரச் செயலாளர் பால் பாண்டி தொழிற்சங்க தலைவர் கோழிக்கடை கணேசன் ஆகியோர் தொழில் துறை அமைச்சரைப் பலமுறை சந்தித்து தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வில் தீர்வு எட்டப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளும்படி கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தினசரி ஊதியமாக ரூ.426-என்று அறிவித்துள்ளார்கள்.



இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வம் தலைமையில், திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து கலைஞர் வாழ்க தளபதி வாழ்க முகஸ்டாலின் வாழ்க என்று வாழ்த்திப் பாராட்டிக் கோஷமிட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...