கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ நடைபெற்றுவரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப. இன்று (19.08.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்‌.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில்‌ நடைபெற்றுவரும்‌ வளர்ச்சிப்‌ பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப. இன்று (19.08.2021) நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.96-க்குட்பட்ட சுந்தராபுரம்‌, லோகநாதபுரம்‌ பகுதியில்‌ குடிநீர் விநியோகிப்பதற்காக 20-இலட்சம்‌ லிட்டர்‌ கொள்ளளவு கொண்ட புதியதாகக் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து அப்பகுதியில்‌ விரைவில்‌ குடிநீர் விநியோகிக்கப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவுள்ள நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்ட ஆணையாளர்‌‌.



தொடர்ந்து 98-வது வார்டுக்குட்பட்ட காந்திநகர், 94வது வார்டுக்குட்பட்ட எம்‌.ஜி.ஆர்‌.நகர்‌, வார்டு எண்‌.99, வெள்ளலார்‌, இட்டேரி ஆகிய பகுதிகளில்‌ பாதாளச் சாக்கடை பணிகளுக்காக பொக்லைன்‌ இயந்திரங்கள்‌ மூலம்‌ குழிகள்‌ தோண்டப்பட்டு குழாய்கள்‌ பதிக்கும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதைப் பார்வையிட்டு, விரைவில்‌ இப்பணிகளை முடித்திட வேண்டுமென உத்தரவிட்ட ஆணையாளர்‌, வார்டு 95, அன்னை இந்திரா நகர்‌ பகுதியில்‌ வீடுகளில்‌ உள்ள கழிவு நீரை வெளியேற்றுவதற்காகப் பாதாளச் சாக்கடை குழாய்களில்‌ இணைப்புக்‌ குழாய்கள்‌ பொருத்தப்பட்டுவரும்‌ பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்ததைத்‌ தொடர்ந்து,



வார்டு 100, முத்து நகர்‌ பகுதியில்‌ கழிவு நீர் வெளியேற்று நிலையம்‌ (pumping station)கட்டப்பட்டுவரும்‌ பணிகள்‌ நடைபெற்றுவருவதை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., இப்பணிகளைத் தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, தெற்கு மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தாராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தாராஜ்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய செயற்பொறியாளர்‌ லட்சுமணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...