பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 17-வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த வாலிபரை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 17-வயது சிறுமியைக் காணவில்லை என்று கூறி, கடந்த ஜூலை மாதம் 7-தேதி, அவரது தந்தை ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ஆனைமலை காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமியின் அருகில் வசித்து வரும் 22-வயது இளைஞர் ஒருவர், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று, காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் சிறுமியை மீட்ட காவல்துறை, 17-வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவினாசி சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 17-வயது சிறுமியைக் காணவில்லை என்று கூறி, கடந்த ஜூலை மாதம் 7-தேதி, அவரது தந்தை ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ஆனைமலை காவல்துறை வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்த நிலையில், சிறுமியின் அருகில் வசித்து வரும் 22-வயது இளைஞர் ஒருவர், சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று, காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் சிறுமியை மீட்ட காவல்துறை, 17-வயது சிறுமியைத் திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவினாசி சிறையில் அடைத்தனர்.