கோவை: கிணத்துக்கடவு அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பத்தாம் நம்பர் முத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜன் நிதியிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்படுகிறது.

தரைமட்ட தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கியது.

கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின், ஊராட்சி செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் துணைத் தலைவர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பத்தாம் நம்பர் முத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜன் நிதியிலிருந்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்படுகிறது.
தரைமட்ட தண்ணீர் தொட்டி கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கியது.
கோவை கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் முகமது யாசின், ஊராட்சி செயலாளர் ராமலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் துணைத் தலைவர்கள் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.