கோவை: கோவை தடாகம் பகுதியில் செங்கல்லை கொண்டு சென்ற இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை தடாகம் பகுதியில் செங்கல்லை கொண்டு சென்ற இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளால் கனிம வளங்கள் அழிக்கப்படுவதை தொடர்ந்து, அனுமதியின்றி பல சூளைகள் இயங்குவதாகவும் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அப்பகுதியில் செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தடாகம் காவல்துறையினர் கணுவாய் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே செங்கற்களை ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்து, போலீசார் தடாகம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், லாரியை ஓட்டி வந்த இரு ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் லாரியின் உரிமையாளர்கள் சத்தியமூர்த்தி மற்றும் கனகராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, 2 உரிமையாளர்கள், 2 ஓட்டுநர்கள்(சுந்தரபாண்டி, ரங்கராஜ்) மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் செங்கல் ஏற்றி வந்த லாரிகளால் செங்கல் சூலைகள் மீண்டும் இயக்கப்படுகிறதா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளால் கனிம வளங்கள் அழிக்கப்படுவதை தொடர்ந்து, அனுமதியின்றி பல சூளைகள் இயங்குவதாகவும் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அப்பகுதியில் செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு தடாகம் காவல்துறையினர் கணுவாய் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே செங்கற்களை ஏற்றி வந்த இரு லாரிகளை பறிமுதல் செய்து, போலீசார் தடாகம் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், லாரியை ஓட்டி வந்த இரு ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் லாரியின் உரிமையாளர்கள் சத்தியமூர்த்தி மற்றும் கனகராஜ் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, 2 உரிமையாளர்கள், 2 ஓட்டுநர்கள்(சுந்தரபாண்டி, ரங்கராஜ்) மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செங்கல் சூளைகள் இயங்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் செங்கல் ஏற்றி வந்த லாரிகளால் செங்கல் சூலைகள் மீண்டும் இயக்கப்படுகிறதா என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.