கோவை: கோவை கடந்த அ.தி.மு.க ஆட்சியில், நிறைவேற்றிக் கொடுக்காத அடிப்படை வசதிகளை, மூன்றே நாட்களில் முடித்து கொடுத்த, தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினருக்கு, பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை: கோவை கடந்த அ.தி.மு.க ஆட்சியில், நிறைவேற்றிக் கொடுக்காத அடிப்படை வசதிகளை, மூன்றே நாட்களில் முடித்து கொடுத்த, தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினருக்கு, பொதுமக்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாநகர் மேற்கு மாவட்ட கணபதி பகுதி 46-வது வட்டம் கணபதி பகுதி, தி.மு.க பொறுப்புக் குழு உறுப்பினராக இருப்பவர் கணபதி சம்பத்குமார். சமீபத்தில், இவரை சந்தித்த பெரியார் நகர் பகுதி மக்கள், அவர்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களை பட்டியலிட்டு, அடிப்படைத் தேவைகளைச் பூர்த்தி செய்து தரும்படி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில், பலமுறை மனு அளித்தும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என வருத்தம் தெரிவித்த மக்கள், உடனடியாக தீர்வு கிடைக்க உதவும்படி கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் மனுவை பெற்றுக்கொண்ட சம்பத்குமார், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மின் கம்பம், உப்புத் தண்ணீர் குழாய் வசதி, சாக்கடை அடைப்பு, போர்வெல் பம்ப் செட் தேவை என கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்த பெரியார் நகர் மக்களின் அடிப்படைத் தேவைகளை மாநகராட்சி உதவியுடன் மூன்றே நாளில் சரி செய்து கொடுத்துள்ளார் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
நீண்ட நாளாக புறக்கணிக்கப்பட்ட தேவைகளை, மூன்றே நாட்களில் செய்து கொடுத்த திமுக பொறுப்புக் குழு உறுப்பினர், சம்பத் குமாருக்கு, பெரியார் நகர் மக்கள் ஒன்றாகச் சேர்ந்துபொன்னாடை அணிவித்து அவர்களது நன்றியை தெரிவித்தனர்.
இது குறித்து பேசிய சம்பத் குமார், தி.மு.க ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து புகார் மனுக்களை அளிக்கலாம், என்று உறுதிபட தெரிவித்தார்.