வால்பாறை: வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் கோவிலை இடித்து சேதப்படுத்தியுள்ளது.
வால்பாறை: வால்பாறையில் காட்டு யானைகள் அட்டகாசம் கோவிலை இடித்து சேதப்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் தற்போது சுற்றித் திரிந்து வருகின்றன.

இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள சின்கோனா பத்தாம் பாத்தி பி மாஸ்டர் பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள மாரியம்மன் கோவில், சுவற்றை இடித்துத் தள்ளி உள்ளே புகுந்து கோவில் பொருட்களை இழுத்துத் தள்ளிச் சேதப்படுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து, அருகே உள்ள ஒரு குடியிருப்பையும் சேதப்படுத்திய நிலையில், சத்தம்கேட்டு எழுந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதியில், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்குத் தகவல் அளிக்க முடியாமல் பொதுமக்களே யானைகளை விரட்டியுள்ளனர்.
மேலும் வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அவசரக்காலத்திற்குக் கூட தொலைப்பேசியைத் தொடர்பு கொள்ளமுடியாத நிலை தொடர்வதால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தொடர்பைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் காட்டுயானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் தற்போது சுற்றித் திரிந்து வருகின்றன.
இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள சின்கோனா பத்தாம் பாத்தி பி மாஸ்டர் பகுதியில் நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள மாரியம்மன் கோவில், சுவற்றை இடித்துத் தள்ளி உள்ளே புகுந்து கோவில் பொருட்களை இழுத்துத் தள்ளிச் சேதப்படுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து, அருகே உள்ள ஒரு குடியிருப்பையும் சேதப்படுத்திய நிலையில், சத்தம்கேட்டு எழுந்த அப்பகுதி பொதுமக்கள் அப்பகுதியில், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் சம்பந்தப்பட்ட வனத்துறையினருக்குத் தகவல் அளிக்க முடியாமல் பொதுமக்களே யானைகளை விரட்டியுள்ளனர்.
மேலும் வால்பாறை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அவசரக்காலத்திற்குக் கூட தொலைப்பேசியைத் தொடர்பு கொள்ளமுடியாத நிலை தொடர்வதால் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் தகவல் தொடர்பைச் சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.