கோவை: தமிழக அரசின் விவசாய பட்ஜெட் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழக அரசின் விவசாய பட்ஜெட் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செயல்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி மையம் அறிவிப்பு, 65 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகச் சாகுபடி பரப்பளவு உயர்த்துதல், விவசாயத்தில் புதிய முறையைக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு, இலவச மின்சார திட்டத்திற்கு ரூ. 4505 கோடி ஒதுக்கீடு, பணை மரம் வளர்ப்பு ஊக்குவிப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதே போல் கோவை விவசாயிகளின் 60 ஆண்டு கோரிக்கையான பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். தமிழகத்தில் நீர் ஆதாரம் பெருகும். வனவிலங்குகளால் உயிர்ச் சேதம், பயிர் சேதம் ஏற்படும் போது உடனடியாக இழப்பீடு தர வேண்டும்.
கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உடனடியாக இழப்பீடு தருவது போல் தமிழகத்தில் தர வேண்டும். கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:-
தமிழகத்தில் விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செயல்பட்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முருங்கை ஏற்றுமதி மையம் அறிவிப்பு, 65 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகச் சாகுபடி பரப்பளவு உயர்த்துதல், விவசாயத்தில் புதிய முறையைக் கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசு, இலவச மின்சார திட்டத்திற்கு ரூ. 4505 கோடி ஒதுக்கீடு, பணை மரம் வளர்ப்பு ஊக்குவிப்பு போன்ற பல்வேறு திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் உணவு உற்பத்தி, வேளாண் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். அதே போல் கோவை விவசாயிகளின் 60 ஆண்டு கோரிக்கையான பாண்டியாறு புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதனால் கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
ஆனைமலை நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். தமிழகத்தில் நீர் ஆதாரம் பெருகும். வனவிலங்குகளால் உயிர்ச் சேதம், பயிர் சேதம் ஏற்படும் போது உடனடியாக இழப்பீடு தர வேண்டும்.
கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் உடனடியாக இழப்பீடு தருவது போல் தமிழகத்தில் தர வேண்டும். கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தில் தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.