கோவை: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எதிரொலியால் கோவை வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க உத்தரவிட்டுள்ளனர்.
கோவை: கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எதிரொலியால் கோவை வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க உத்தரவிட்டுள்ளனர்.
கேரளா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அருகே உள்ள கோவை மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 200 கடந்து வருவதால் கோவை மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாகக் கோவையில் காலை 10-மணி முதல் மாலை 5-மணிவரை வணிக நிறுவனங்கள் செயல் பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளா கோவை எல்லையான வாளையாறு உள்ளிட்ட 13- சோதனைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட சுகாதார அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் வாளையாறு சோதனை சாவடியில் தீடிரென ஆய்வு மேற்கொண்டனர். கேரளாவிலிருந்து கோவைக்கும் வரும் வாகனத்தை ஆய்வு செய்தனர்.
பின்னர், உரிய ஆவணங்கள் இல்லாமல் வருபோரை கேரளாவிற்குத் திருப்பி அனுப்புகின்றனர். மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ. 5.73 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.4.7-லட்சம் அபராதம் விதக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.