கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக வீடுதோறும் சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
கோவை: கோவை மாவட்ட புறநகர்ப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை அடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக வீடுதோறும் சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
கோவை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் 40 சதவீதத்திற்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 37.08 சதவீதமாகக் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் மொத்த பாதிப்பில் ஊரக பகுதியான காரமடையில் கொரோனா பரவல் 7.60 சதவீதமாகவும், துடியலூரில் 9.83 சதவீதமாகவும், சூலூரில் 5.04 சதவீதமாகவும், ஆனைமலை பகுதியில் 5.53 சதவீதமாகவும், மதுக்கரை பகுதியில் 5.28 சதவீதமாகவும் உள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள புறநகர் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.,யால் நியமிக்கப்பட்ட காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட கொரோனா நோய்த் தொற்று கண்காணிப்புக் குழு கடந்த 2வது அலையின் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
இதனிடையே வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர கிராமங்களில் கூட்டம் கூடுவதைக் கண்காணிக்கத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாநகராட்சியில் கடந்த 2 வாரங்களுக்கு முன் 40 சதவீதத்திற்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 37.08 சதவீதமாகக் குறைந்து உள்ளது. அதே நேரத்தில் மொத்த பாதிப்பில் ஊரக பகுதியான காரமடையில் கொரோனா பரவல் 7.60 சதவீதமாகவும், துடியலூரில் 9.83 சதவீதமாகவும், சூலூரில் 5.04 சதவீதமாகவும், ஆனைமலை பகுதியில் 5.53 சதவீதமாகவும், மதுக்கரை பகுதியில் 5.28 சதவீதமாகவும் உள்ளது. கொரோனா பரவல் அதிகம் உள்ள புறநகர் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி.,யால் நியமிக்கப்பட்ட காவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட கொரோனா நோய்த் தொற்று கண்காணிப்புக் குழு கடந்த 2வது அலையின் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
இதனிடையே வட்டார மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் குழு உறுப்பினர்களுடன் இணைந்து வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர கிராமங்களில் கூட்டம் கூடுவதைக் கண்காணிக்கத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசின் வழிகாட்டு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.