பெண் போலீசாரின் வீரச் செயலைப் பாராட்டி போலீசாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்திய மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம்.!!!

கோவை: கோவையில் பி.ஆர்.எஸ் வளாகத்தில் உயர் காவல் அதிகாரி வாகனத்தை ஓட்டி வந்த மர்ம நபரை பிடித்த பெண் போலீசாரை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.


கோவை: கோவையில் பி.ஆர்.எஸ் வளாகத்தில் உயர் காவல் அதிகாரி வாகனத்தை ஓட்டி வந்த மர்ம நபரை பிடித்த பெண் போலீசாரை மாவட்ட எஸ்.பி செல்வனகரதினம் பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

கோவை மாவட்டம், பிஆர்எஸ் வளாகத்தில் இன்று (17.08.2021) அதிகாலை 4.30 மணிக்கு காப்பு தணிக்கை செய்வதற்காக ஆயுதப்படையை சேர்ந்த தலைமை பெண் காவலர் செண்பக வடிவு (HC 1516) என்பவர் சென்று கொண்டிருந்தார்.

காவலர் குடியிருப்பு வளாகத்திற்குள் காவல் உயர் அதிகாரியின் வாகனம் சென்றுள்ளது. அதே வழியாக வந்த ஆயுதப்படை பெண் தலைமை காவலர் உயர் அதிகாரியின் வாகனத்தை உற்றுநோக்கும் போது வாகனத்தை ஓட்டி வந்த நபரின் தலையில் அசோக சின்னம் உள்ள தொப்பியை‌ அவர் முரண்பாடாக வைத்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே பெண் தலைமை காவலர் அந்த வாகனத்தை வழிமறித்து விசாரிக்கும் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

அதனால் ஆயுதப்படை பெண் தலைமை காவலர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.

அதே நிலையில் அந்த வழியாக வந்த 2 சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர்களை உதவிக்கு அழைத்து உயர் அதிகாரியின் வாகனத்தை இயக்கி வந்த அடையாளம் தெரியாத நபரை வாகனத்தை விட்டு இறக்கி விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.

மேற்படி உயர் அதிகாரியின் வாகனத்தை இயக்கி வந்த அடையாளம் தெரியாத நபரை கோவை மாநகர காவல் உதவி ஆய்வாளரின் வசம் ஒப்படைத்துவிட்டு உடனே இத்தகவலை கோவை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கூறியும்,

பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படை தனிப்பிரிவு தலைமை காவலர் எட்வர்டு ராஜ் (HC1062)தகவல் தெரிவித்துள்ளார். இச்செயலுக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனநகரத்தினம் இ.கா.ப., கோவை மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலர் செண்பக வடிவு (HC1516) என்பவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...