கோவை: கோவையில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடைபெற்று கொண்டிருக்கும் சட்டவிரோத விசாரணையை தடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் இஸ்லாமியர்களை குறிவைத்து நடைபெற்று கொண்டிருக்கும் சட்டவிரோத விசாரணையை தடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையரிடம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில்,

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகளால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அச்சுறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விசாரணைக்கு ஆட்படுத்தப்படும் நபர்களிடம் அவர்களின் தனிப்பட்ட அனைத்து விவரங்களும் பெறப்படுவதாகவும், ஆதார் விவரம், புகைப்படம், மொபைல் போனின் அனைத்து விவரங்களும் கட்டாயப்படுத்தி காவல்துறையினர் பெறுவதாகும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது போன்ற சட்ட விரோத விசாரணையில் ஈடுபடும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், விசாரணை என்ற பெயரில் கோவையில் காவல்துறையினரின் அராஜகம் அதிகமாகி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருப்பது காவல்துறையினரின் பார்வையில் குற்றமாக பார்க்கப்படுவது பெரும் அபத்தமாக இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில்,
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விசாரணை என்ற பெயரில் காவல்துறை அதிகாரிகளால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அச்சுறுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விசாரணைக்கு ஆட்படுத்தப்படும் நபர்களிடம் அவர்களின் தனிப்பட்ட அனைத்து விவரங்களும் பெறப்படுவதாகவும், ஆதார் விவரம், புகைப்படம், மொபைல் போனின் அனைத்து விவரங்களும் கட்டாயப்படுத்தி காவல்துறையினர் பெறுவதாகும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது போன்ற சட்ட விரோத விசாரணையில் ஈடுபடும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், விசாரணை என்ற பெயரில் கோவையில் காவல்துறையினரின் அராஜகம் அதிகமாகி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட சிம் கார்டுகள் வைத்திருப்பது காவல்துறையினரின் பார்வையில் குற்றமாக பார்க்கப்படுவது பெரும் அபத்தமாக இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இது குறித்து தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.