பொள்ளாச்சியில் கார் வாங்கி கோவிலுக்குச் செல்லும்போது கிணற்றுக்குள் பாய்ந்து ஒருவர் பலி.!!

கோவை: பொள்ளாச்சியில் புதியதாகச் சொகுசு கார் வாங்கி கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது கிணற்றுக்குள் கார் பாய்ந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை: பொள்ளாச்சியில் புதியதாகச் சொகுசு கார் வாங்கி கோவிலுக்குச் செல்வதற்காகப் புறப்பட்டபோது கிணற்றுக்குள் கார் பாய்ந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஏ.நாகூர் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(67), விவசாயி. இவர் நேற்று புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த காரில் இன்று குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்வதற்காக வீட்டுக்குள் இருந்து வெளியே காரை எடுத்துள்ளார்.

கார் ஆட்டோ கியர் என்பதால் ஏற்கனவே ரிவர்ஸ் கியரில் இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, வீட்டருகே இருந்த 50-அடி கிணற்றில் தவறி விழுந்தது.

அருகிலிருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும், கோமங்கலம் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.



காரை ஓட்டிய ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது எட்டு வயதுப் பேரன் நகுல் கிருஷ்ணன் காயமடைந்து பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.

கிணற்றிலிருந்து தீயணைப்புத் துறையினர் காரையும் மீட்டனர். கோமங்கலம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...