கோவை: வால்பாறையில் கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் கொட்டும் மழையிலும் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை தவிர்க்க சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, நேற்று 1200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில், இன்று வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 450 பேர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த முகாமில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதேபோல், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் 1300 கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தொற்றை தவிர்க்க சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, நேற்று 1200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில், இன்று வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் 450 பேர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த முகாமில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதேபோல், தேயிலைத் தோட்டப் பகுதிகளில் 1300 கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.