கிராம உதவியாளர் காலில் விழுந்த சம்பவம்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோவை மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தல்.!!

கோவை: அன்னூர் ஒட்டர் பாளையம் சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்திடவும், உண்மைகளை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: அன்னூர் ஒட்டர் பாளையம் சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்திடவும், உண்மைகளை மறைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர் பாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தில், உதவியாளராக பணியாற்றி வந்த முத்துசாமி என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த கிராம உதவியாளரைக் காலில் விழ வைத்த வீடியோ 06-08-2021 அன்று இரவு முதல் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.

முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் சாதிய வன்கொடுமை என்ற வகையில் அதனை ஊடகங்களும் பதிவு செய்தன. இதன் காரணமாக வன்கொடுமை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய்த்துறை சார்பாக அச்சம்பவம் குறித்து விசாரணை நடை பெற்றது. விசாரணைக் குழு முன்பாக ஆஜரான ஒட்டர் பாளையம் கிராம நிர்வாக அலுவலரும், கிராம உதவியாளரும் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் விவசாயி கோபால்சாமி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒரு புதிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் தனது நிலத்தின் பட்டா மாறுதலுக்காகக் கிராம நிர்வாக அலுவலரை விசாரிக்க கோபால்சாமி சென்ற போது, அவரை கிராம உதவியாளர் முத்துசாமி அவதூறான வார்த்தை பேசி தாக்கியது, அதன் பிறகு காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போலச் செய்ததும் வெளியாகி உள்ளது.

பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் ஒருவர் இந்த விவகாரத்தில், இரண்டு வீடியோக்கள் எடுத்து அதில் பிரச்சனைக்குரிய ஒரு சம்பவத்தைப் பதிவு செய்திருந்த வீடியோவை மட்டும் வெளியிட்டு உள்ளார்.

தவறான உள்நோக்கத்தோடும், சுய ஆதாயத்திற்காகவும், அந்த நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். இது போன்ற செயல்கள் சமூக அளவில் பதற்றதை உருவாக்கும் என்பதை அறிந்தும் அதைச் செய்து உள்ளார்.

மேலும் அரசு அமைத்த விசாரணைக்குழுவின் முன்பு கிராம நிர்வாகி அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோர் உண்மை சம்பவத்தை மறைத்துள்ளனர்.

எனவே மாவட்ட நிர்வாகம், இந்த சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தி தவறான வீடியோவை வெளியிட்ட நபர் மீதும், உண்மை சம்பவத்தை மறைத்த அரசு ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோவை மாவட்ட குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கும் என கோவை மாவட்ட குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...