பொள்ளாச்சியில் புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்.!!

பொள்ளாச்சி: புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பொள்ளாச்சி: புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி வழங்க வேண்டும், உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி, பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் இன்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை துணைத்தலைவர், சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட கிளை செயலாளர் மாரிமுத்து, பள்ளிக் கல்வித் துறை மாவட்ட தலைவர் காளிமுத்து, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசு, தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.

தமிழகச் சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து வட்ட கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளதாக அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...