கோவை: கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குறிச்சி பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கோவை: கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு குறிச்சி பகுதியில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் அனுசரித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட குறிச்சி பகுதியில் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற நினைவு நாள் நிகழ்ச்சியில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி திமுகவினர் மரியாதை செய்தனர்.
இந்த நினைவு நாள் நிகழ்ச்சியில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்துகொண்டு கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
இதேபோல், கணேசபுரம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நினைவு நாள் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குறிச்சி தெற்குப்பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், ஈச்சனாரி மகாலிங்கம், கணேசபுரம் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.