கோவை: தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று(7.8.21) சென்னையில் நடந்த தமிழக பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில், அதன் தலைவர் C.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு ஜிஎஸ்டி(GST) பத்திரப்பதிவு, போக்குவரத்து மற்றும் விவசாயம் சம்பந்தமான ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
கோவை: தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று(7.8.21) சென்னையில் நடந்த தமிழக பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில் இந்திய தொழில் வர்த்தக சபை கோவை சார்பில், அதன் தலைவர் C.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு ஜிஎஸ்டி(GST) பத்திரப்பதிவு, போக்குவரத்து மற்றும் விவசாயம் சம்பந்தமான ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார்.
தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று(7.8.21) சென்னையில் நடந்த தமிழக பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில்...
வணிக வரித்துறையில் C form பற்றி நெடுநாளாக நிலுவையில் இருக்கும் நோட்டீஸ்களை வாபஸ் பெற வேண்டும்.
நுழைவு வரி, CST மற்றும் வாட் வரி விதிப்பில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வாக சமாதான திட்டம் ஒன்றை (one time settlement scheme) அறிவிக்க வேண்டும்.
மாவட்ட மற்றும் மாநில அளவில் வரிவிதிப்பு குறைதீர்ப்பு கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மாவட்ட அளவில் வியாபார நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
கட்டுமானத்துறையில் வரி விதிப்பில் ITC credit எடுக்க வகை செய்ய வேண்டும்.
பத்திரப்பதிவு துறையில் பெண்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க வேண்டும்.
சொத்துகள் வாங்கி ஐந்து வருடத்துக்குள் விற்கும்போது, set off in stamp duty அளிக்க வேண்டும்.
கோவிட் காலத்தில் மகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட இந்த மாநிலங்களில் பத்திரப்பதிவு சில சதவிகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதை தமிழ்நாட்டில் செய்தால் மக்களுக்கு ஏதுவாக இருக்கும்.
விவசாயத்துறையில் நெல் கொள்முதல் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
இது தவிர ஜிஎஸ்டி, விவசாயம், பத்திரப்பதிவு, போக்குவரத்து சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிதி அமைச்சரிடம் இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் அளிக்கப்பட்டது.
தமிழக வணிகவரித்துறை மற்றும் நிதி அமைச்சகம் ஏற்பாட்டில் இன்று(7.8.21) சென்னையில் நடந்த தமிழக பட்ஜெட் கருத்துக்கேட்பு கூட்டத்தில்...
வணிக வரித்துறையில் C form பற்றி நெடுநாளாக நிலுவையில் இருக்கும் நோட்டீஸ்களை வாபஸ் பெற வேண்டும்.
நுழைவு வரி, CST மற்றும் வாட் வரி விதிப்பில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்கு மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வாக சமாதான திட்டம் ஒன்றை (one time settlement scheme) அறிவிக்க வேண்டும்.
மாவட்ட மற்றும் மாநில அளவில் வரிவிதிப்பு குறைதீர்ப்பு கூட்டங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்ட வேண்டும். மாவட்ட அளவில் வியாபார நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
கட்டுமானத்துறையில் வரி விதிப்பில் ITC credit எடுக்க வகை செய்ய வேண்டும்.
பத்திரப்பதிவு துறையில் பெண்களுக்கு வரிவிதிப்பில் சலுகை அளிக்க வேண்டும்.
சொத்துகள் வாங்கி ஐந்து வருடத்துக்குள் விற்கும்போது, set off in stamp duty அளிக்க வேண்டும்.
கோவிட் காலத்தில் மகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட இந்த மாநிலங்களில் பத்திரப்பதிவு சில சதவிகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அதை தமிழ்நாட்டில் செய்தால் மக்களுக்கு ஏதுவாக இருக்கும்.
விவசாயத்துறையில் நெல் கொள்முதல் மையங்களை அதிகப்படுத்த வேண்டும்.
இது தவிர ஜிஎஸ்டி, விவசாயம், பத்திரப்பதிவு, போக்குவரத்து சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை நிதி அமைச்சரிடம் இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் அளிக்கப்பட்டது.