கோவை: கோவை தி யுனைடெட் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கொரோனா பேருந்து பிரச்சாரத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்றார்.
கோவை: கோவை தி யுனைடெட் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற கொரோனா பேருந்து பிரச்சாரத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்றார்.
கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் சரவணம்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
2 -வது அலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா மூன்றாவது அலை பரவலைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி அடுத்த குரும்பம் பாளையத்தில் உள்ள தி யுனைடெட் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் முன்னிலை வகித்தார். இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இதையடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பிரச்சார பேருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி கோவை அரசு மருத்துவமனை, காந்திபுரம் பேருந்து நிலையம், கணபதி பேருந்து நிலையம், வழியாக சரவணம்பட்டி சோதனைச் சாவடியில் நிறைவு செய்யப்பட்டது.
சரவணம்பட்டி பகுதிக்கு வந்த பிரச்சார பேருந்தை சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி வரவேற்று நிறைவு செய்தார். அவர் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் சிறப்பாக நடத்திய அறக்கட்டளைக்குப் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சரவணம்பட்டி அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷணன் உட்படப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனியார் அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் சரவணம்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
2 -வது அலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா மூன்றாவது அலை பரவலைப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சரவணம்பட்டி அடுத்த குரும்பம் பாளையத்தில் உள்ள தி யுனைடெட் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த அறக்கட்டளை நிறுவனர் ராதாகிருஷ்ணன் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் முன்னிலை வகித்தார். இதில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
இதையடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. இந்த பிரச்சார பேருந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து தொடங்கி கோவை அரசு மருத்துவமனை, காந்திபுரம் பேருந்து நிலையம், கணபதி பேருந்து நிலையம், வழியாக சரவணம்பட்டி சோதனைச் சாவடியில் நிறைவு செய்யப்பட்டது.
சரவணம்பட்டி பகுதிக்கு வந்த பிரச்சார பேருந்தை சரவணம்பட்டி ஆய்வாளர் கந்தசாமி வரவேற்று நிறைவு செய்தார். அவர் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைச் சிறப்பாக நடத்திய அறக்கட்டளைக்குப் பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சரவணம்பட்டி அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோபாலகிருஷணன் உட்படப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.