சி.பி.எஸ்.சி மாணவர்களுடைய மதிப்பெண் பட்டியல் குறித்த புகார் எதிரொலி-பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம்.!!

கோவை: இந்த ஆண்டு கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.சி மாணவர்களுடைய மதிப்பெண் பட்டியல் குறித்த புகார் எதிரொலியாக உடனடியாக மாணவர்களுக்குப் பயன் விளைவிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.


கோவை: இந்த ஆண்டு கல்லூரியில் சேரக்கூடிய மாணவர்களுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.சி மாணவர்களுடைய மதிப்பெண் பட்டியல் குறித்த புகார் எதிரொலியாக உடனடியாக மாணவர்களுக்குப் பயன் விளைவிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடிதம் எழுதியுள்ளார்.

ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த சிபிஎஸ்சி 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைவரும் பாஸ் என்ற திட்டத்தின் கீழ் அந்த மாணவர்களுடைய காலாண்டு, அரையாண்டு ரிவிஷன் டெஸ்ட் உட்பட அவர்களுடைய நன்னடத்தை அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டது.

அதில் கோவையில் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி, கதிர் வித்யா மந்திர் ஆகிய பள்ளி மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுப் பார்த்தபோது, கட்டாப் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்தது.

அவர்கள் பள்ளியில் நன்கு படிக்கக்கூடிய மாணவர்களாக இருந்தனர். தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்கள் பள்ளியில் கோரிக்கை வைத்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதைக் கருத்தில் கொண்டு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மத்திய கல்வித்துறை அமைச்சர் பிரதாபனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கோவையில் இரண்டு பள்ளிகளில் மதிப்பெண்களில் பட்டியலில் மதிப்பெண்கள் மிகவும் குறைந்துள்ளதாகப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை அளித்துள்ளன.

அதனால் நடப்பாண்டிலேயே மாணவர்களுடைய எதிர்காலம் கருதி இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இதுபோன்ற புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

அதனால் தாங்கள் உடனடியாக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...