கோவை: கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் 82 இலட்சத்து 85,000 மோசடி செய்த கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்கள் மூன்று பேரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
கோவை: கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி நிறுவனம் நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் 82 இலட்சத்து 85,000 மோசடி செய்த கிரீன் லைப் நிதி நிறுவன அதிபர்கள் மூன்று பேரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
கோவையில் இயங்கி வந்த கிரீன் லைஃப் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான கோவை புதூரைச் சேர்ந்த அஸ்மத்கான் கோரி 35, திருநகர். மேற்கு நத்த மாடிப்பட்டி, மெயின் ரோடு, கோல்டன் ராக், திருச்சியைச் சேர்ந்த அம்ஜத்கான் கோரி 36, உறையூர் சாலை ரோடு திருச்சி சையது முகமது ரபி 35, என்பவர்கள் பொதுமக்களை ஏமாற்றி 44 பேரிடம் முதலீட்டு தொகையைப் பெற்று முதலீட்டு பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பு பணமாகத் தருவதாக ஆசை வார்த்தை கூறி 82 இலட்சத்து 85,000 டெபாசிட்டாக பெற்றுக் கொண்டும் பின்னர் பணத்தைத் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண் 35/2010 சாபி 120 B,406, 420, இ.த.ச மற்றும் 5 of TAPID act வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்கானது கோவை டான் பிட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.

இதைதொடர்ந்து அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகி உள்ளதால் சட்டப்பிரிவு 82 கு.வி.மு.ச படி அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக கோவை டான் பிட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்களால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இயங்கி வந்த கிரீன் லைஃப் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குநர்களான கோவை புதூரைச் சேர்ந்த அஸ்மத்கான் கோரி 35, திருநகர். மேற்கு நத்த மாடிப்பட்டி, மெயின் ரோடு, கோல்டன் ராக், திருச்சியைச் சேர்ந்த அம்ஜத்கான் கோரி 36, உறையூர் சாலை ரோடு திருச்சி சையது முகமது ரபி 35, என்பவர்கள் பொதுமக்களை ஏமாற்றி 44 பேரிடம் முதலீட்டு தொகையைப் பெற்று முதலீட்டு பணத்திற்கு ஒவ்வொரு மாதமும் இரட்டிப்பு பணமாகத் தருவதாக ஆசை வார்த்தை கூறி 82 இலட்சத்து 85,000 டெபாசிட்டாக பெற்றுக் கொண்டும் பின்னர் பணத்தைத் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண் 35/2010 சாபி 120 B,406, 420, இ.த.ச மற்றும் 5 of TAPID act வழக்குப்பதிவு செய்து மேற்படி வழக்கானது கோவை டான் பிட் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றவாளிகள் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர்.
இதைதொடர்ந்து அவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பிறகும் தொடர்ந்து அவர்கள் தலைமறைவாகி உள்ளதால் சட்டப்பிரிவு 82 கு.வி.மு.ச படி அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக கோவை டான் பிட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்களால் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.