கோவையில் அரசு அலுவலகத்தில் புகுந்து ஊழியரின் கைப்பையை திருடிய மர்மநபர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!!

கோவை: கோவையில் அரசு அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஊழியரின் கைப்பையைத் திருடிச் சென்ற‌ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் அரசு அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பெண் ஊழியரின் கைப்பையைத் திருடிச் சென்ற‌ சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் லதா.

கடந்த திங்கட்கிழமை அன்று அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் லதா உட்பட அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்து திரும்பி வந்தபோது தன் இருக்கையிலிருந்த கைப்பை திருடு போயிருப்பது லதாவுக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அலுவலகத்திற்குச் சென்ற காவல்துறை அங்குப் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மர்ம நபர் ஒருவர் அலுவலகத்தில் புகுந்து லதாவின் கைப்பையைத் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை காவல்துறை தேடி வருகின்றனர்.

அரசு அலுவலகத்திலேயே புகுந்து ஊழியரின் கைப்பையை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...