கோவை: வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கட்டடத் தொழிலாளர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, அங்கிருந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் லாகவமாகப் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.
கோவை: வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கட்டடத் தொழிலாளர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, அங்கிருந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினர் லாகவமாகப் பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்றுவிட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கட்டடப் பணியின் போது உலா வந்த கட்டு விரியன் பாம்பை கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கண்டு, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த நாகராஜன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் மணல் மூட்டை இடிபாடுகள் இடையே ஒளிந்திருந்த நான்கரை அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை லாகவமாகப் பிடித்தனர். இது விஷத்தன்மை உள்ள பாம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மழைக்காலம் என்பதால், குளிர் அதிகமாக உள்ளதால் சூடாக இருக்கும் இடத்தை நோக்கி பாம்புகள் பயணிக்கிறது. தற்போது வீடுகளில் உள்ள அடுப்பங்கரை பகுதியிலும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் அறிவுரை வழங்கினர்.

இந்தப் பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டு அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விடுவதற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கட்டடப் பணியின் போது உலா வந்த கட்டு விரியன் பாம்பை கட்டடப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கண்டு, உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த நாகராஜன் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் மணல் மூட்டை இடிபாடுகள் இடையே ஒளிந்திருந்த நான்கரை அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பை லாகவமாகப் பிடித்தனர். இது விஷத்தன்மை உள்ள பாம்பு என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மழைக்காலம் என்பதால், குளிர் அதிகமாக உள்ளதால் சூடாக இருக்கும் இடத்தை நோக்கி பாம்புகள் பயணிக்கிறது. தற்போது வீடுகளில் உள்ள அடுப்பங்கரை பகுதியிலும் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்று தீயணைப்புத் துறையினர் அறிவுரை வழங்கினர்.
இந்தப் பாம்பை பிடித்து சாக்குப்பையில் போட்டு அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் விடுவதற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.