கோவை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வால்பாறையில் துவங்கப்பட்டது.
கோவை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வால்பாறையில் துவங்கப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இன்று வால்பாறையில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் வெள்ளி முடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

மேலும் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இன்று இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. ஆரோக்கிய திட்டத்தில் இணைந்துள்ள தன்னார்வலர் மூலம் மருந்துகள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் அறிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காணொலி காட்சி வாயிலாக இன்று துவக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இன்று வால்பாறையில் உள்ள பழங்குடியின மக்கள் வசிக்கும் வெள்ளி முடி ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
மேலும் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இன்று இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. ஆரோக்கிய திட்டத்தில் இணைந்துள்ள தன்னார்வலர் மூலம் மருந்துகள் பொது மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் அறிவித்துள்ளார்.