வால்பாறையில் குடியிருப்புகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகள்..! அடர்ந்த வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை!

வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரை ஒட்டியுள்ள புது தோட்டம் தேயிலை தோட்டத்தில் அரியவகை இனமான சிங்கவால் குரங்குகள் ஏராளமாக உள்ளன. இந்தக் குரங்குகள் புது தோட்டம் தேயிலைத் தோட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறி நூற்றுக்கும் மேற்பட்ட சிங்கவால் குரங்குகள் வால்பாறை நகரில் சுற்றி வருகின்றன.

இந்நிலையில், இந்த குரங்குகள் காமராஜ் நகர், கக்கன் காலனி, கோஆபரேடிவ் காலனி மற்றும் வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து சமையலறையில் உள்ள உணவு பண்டங்களை சாப்பிடும் வகையில் கிடைத்த பொருட்களை எடுத்து உடைத்தும் நாசப்படுத்தி வருகின்றன.



மேலும், கையில் கிடைத்த பொருட்களை தூக்கிச் சென்று விடுகின்றன. மேலும் வால்பாறை நகரின் பிரதான சாலையில் உள்ள பேக்கரிகள், டீக்கடைகள் பழக்கடையில் புகுந்து பழங்கள் பொருட்களை எடுத்துச் செல்கின்றன. விரட்டினாலும் கடிக்க வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்திலும் நிம்மதி இழந்தும் உள்ளனர்.

இந்த நிலையில், வால்பாறை நகரில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிங்கவால் குரங்குகளை வனத்துறையினர் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...