பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2-டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

கோவை: பொள்ளாச்சியில் இருவேறு இடங்களிலிருந்து, கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் இருவேறு இடங்களிலிருந்து, கேரளாவுக்குக் கடத்த முயன்ற 2-டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பொள்ளாச்சியிலிருந்து, கேரளாவுக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகப் புகார் இருந்து வந்தது.

இதையடுத்து தமிழக-கேரள எல்லைப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியிலிருந்து காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் பரிசோதனை செய்ததில், ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஒரு காரில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல ஆனைமலை போலீசார், அம்பராம்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, காரில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.



மேலும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட அஜ்மல் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.

இதையடுத்து பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை காவல் நிலையங்களில் பிடிக்கப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...