வால்பாறை தையல் கலைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு

கோவை: வால்பாறையில் தையல் கலைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதோடு கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.


கோவை: வால்பாறையில் தையல் கலைஞர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபற்றது. இக்கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதோடு கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள தையற் கலைஞர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு செயலாளர் கருப்பசாமி தலைமை வகித்தார். பொருளாளர் ஜான்சன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஜெகன் கலந்து கொண்டு கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி சிறப்புரையாற்றி னார்.

தொடர்ந்து வால்பாறை உதவி காவல் ஆய்வாளர் பாலாஜி கலந்துகொண்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொருளாளர் ஜான்சன் ஆண்டறிக்கையை வாசித்தார். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் மேற்பார்வையில் நடைபெற்றது. இதில் சிற்றரசு தலைவராகவும் மாடசாமி பொதுச் செயலாளராகவும் ஜான்சன் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர். 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.



இந்நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...