கோவை: மாவட்டத்தில், 10 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருவது குறித்து, மின் பகிர்மான தலைமை பொறியாளரைச் சந்தித்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தைத் தவிரத்திட நடவடிக்கை கோரி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தினர் மனு கொடுத்து உள்ளனர்.
கோவை: மாவட்டத்தில், 10 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருவது குறித்து, மின் பகிர்மான தலைமை பொறியாளரைச் சந்தித்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தைத் தவிரத்திட நடவடிக்கை கோரி தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தினர் மனு கொடுத்து உள்ளனர்.
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்கள் மூலமாகக் கடந்த 15 நாட்களாக ஒரு நாளைக்கு எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 5 முதல் 10 முறை வரை, 10 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அந்த அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் குறு-சிறு தொழில் முனைவோர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திரங்கள் சட்டென்று நிற்பதால் இயந்திரத்தில் இருக்கும் ஜாப்புகள் கன்டம் ஆவதுடன், அதற்காக அமைக்கும் டூல்கள் உடைவதாலும், கடுமையான பொருள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி உள்ளது.
இதனால் ஜாப்ஆடர்கள் செய்து கொடுப்பவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப லாபங்களைக் கூட, ஏற்படும் பொருள் நஷ்டத்துக்குக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
கடுமையான பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும், அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் செய்யப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும் வேண்டுவதாகவும், மின் பராமரிப்புக்காக அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதம் ஒருமுறை மின் நிறுத்தம் செய்யப்பட்டும், அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் பெரும் நஷ்டம் சந்திக்கும் தொழில் முனைவோர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து தடை இல்லாத மின்சாரம் வழங்கிடவும், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ், பொதுச் செயலாளர் பிரதாப்சேகர், துணைத்தலைவர் கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் பாரத் ரவி மின்சார வாரியத்தின் கோவை மாவட்ட மின் பகிர்மான தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங்கை சந்தித்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தைத் தவிரத்திட நடவடிக்கை கோரி மனு கொடுத்து உள்ளனர்.
கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு துணை மின்நிலையங்கள் மூலமாகக் கடந்த 15 நாட்களாக ஒரு நாளைக்கு எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 5 முதல் 10 முறை வரை, 10 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அந்த அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் குறு-சிறு தொழில் முனைவோர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் ஓடிக்கொண்டு இருக்கும் இயந்திரங்கள் சட்டென்று நிற்பதால் இயந்திரத்தில் இருக்கும் ஜாப்புகள் கன்டம் ஆவதுடன், அதற்காக அமைக்கும் டூல்கள் உடைவதாலும், கடுமையான பொருள் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டி உள்ளது.
இதனால் ஜாப்ஆடர்கள் செய்து கொடுப்பவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப லாபங்களைக் கூட, ஏற்படும் பொருள் நஷ்டத்துக்குக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
கடுமையான பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும், அறிவிக்கப்படாத மின் நிறுத்தம் செய்யப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாக்கவும் வேண்டுவதாகவும், மின் பராமரிப்புக்காக அனைத்து துணை மின்நிலையங்களிலும் மாதம் ஒருமுறை மின் நிறுத்தம் செய்யப்பட்டும், அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தால் பெரும் நஷ்டம் சந்திக்கும் தொழில் முனைவோர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து தடை இல்லாத மின்சாரம் வழங்கிடவும், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ், பொதுச் செயலாளர் பிரதாப்சேகர், துணைத்தலைவர் கார்த்திகேயன், மாவட்டச் செயலாளர் பாரத் ரவி மின்சார வாரியத்தின் கோவை மாவட்ட மின் பகிர்மான தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங்கை சந்தித்து அறிவிக்கப்படாத மின் நிறுத்தத்தைத் தவிரத்திட நடவடிக்கை கோரி மனு கொடுத்து உள்ளனர்.