கோவை: கோவையில் மது மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, சூதாட்டம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் மது மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, சூதாட்டம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல்துறை மது, தடை செய்யப்பட்ட புகையிலை, சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து காவல் துறை ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றவாளிகளைக் கண்காணித்து வருகின்றன.
இன்று மட்டும் புகையிலை, மது, சூதாட்டம் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
‘‘கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்,
மது வழக்குகள்:
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 03
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 03
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்:45 மது பாட்டில்கள்.
புகையிலை பாக்கெட் வழக்குகள்:
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 02
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 02
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்: 18 பாக்கெட்டுகள்.
சூதாட்ட வழக்குகள்:
பதிவு செய்யப்பட்ட வழக்குகள்: 02
கைது செய்யப்பட்ட எதிரிகள்: 14
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விவரம்: சேவல் - 4, ரூ.2200/-
மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 77081 00100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.