கோவை: சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் அரசு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை: சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்துப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் அரசு வழங்க உத்தரவிடப்பட்டது.
கோவை போக்சோ மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்சம் அரசு நிதி வழங்க வேண்டுமெனவும், நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காணாமல் போனதாக அவரது பெற்றோர் சார்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
இரு வாரத்திற்குப் பிறகு சிறுமியை காவல்துறையினர் மீட்டு, விசாரணை செய்ததில், கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த இடையளர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவரைக் காதலித்து, அவருடன் சென்றதாகவும், அப்போது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்துகொண்டதாகச் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில், கார்த்திக்கைக் கைது செய்த காவல்துறையினர், ஆள் கடத்தல், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்ஸோ ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கார்த்திக்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரை செய்தார்.
கோவை போக்சோ மன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 5 லட்சம் அரசு நிதி வழங்க வேண்டுமெனவும், நீதிமன்றத்தில் ஆஜராகாத வாலிபருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் காணாமல் போனதாக அவரது பெற்றோர் சார்பில் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
இரு வாரத்திற்குப் பிறகு சிறுமியை காவல்துறையினர் மீட்டு, விசாரணை செய்ததில், கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த இடையளர்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவரைக் காதலித்து, அவருடன் சென்றதாகவும், அப்போது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து, திருமணம் செய்துகொண்டதாகச் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில், கார்த்திக்கைக் கைது செய்த காவல்துறையினர், ஆள் கடத்தல், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், போக்ஸோ ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையை முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கார்த்திக்கிற்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து கோவை போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதி பரிந்துரை செய்தார்.