கோவை: கோவை அருகே வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை அருகே வயதான தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் செம்மேடு அருகே வெள்ளியங்கிரி பூண்டி கோவிலுக்குச் செல்லும் வழியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண், மற்றும் 65 வயது மதிக்கத்தக்கப் பெண் என தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆலந்துரை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்குச் சென்ற காவல்துறை சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "இந்த தம்பதிகள் உள்ளூர் வாசிகள் இல்லை. ஆடிப்பெருக்கு என்பதால் கோவிலுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதுவரை அடையாளமும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால், புதிதாகத் தாலி மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது. விசாரித்து வருகிறோம்." என்றனர்.
வயதான தம்பதிகள் விஷம் அருந்தி சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் செம்மேடு அருகே வெள்ளியங்கிரி பூண்டி கோவிலுக்குச் செல்லும் வழியில் 70 வயது மதிக்கத்தக்க ஆண், மற்றும் 65 வயது மதிக்கத்தக்கப் பெண் என தம்பதிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆலந்துரை காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்குச் சென்ற காவல்துறை சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "இந்த தம்பதிகள் உள்ளூர் வாசிகள் இல்லை. ஆடிப்பெருக்கு என்பதால் கோவிலுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதுவரை அடையாளமும், தற்கொலை செய்து கொண்டதற்கான காரணமும் தெரியவில்லை. ஆனால், புதிதாகத் தாலி மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது. விசாரித்து வருகிறோம்." என்றனர்.
வயதான தம்பதிகள் விஷம் அருந்தி சாலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.