கோவை: கிணத்துக்கடவு காளியண்ணன்புதூரில் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு காளியண்ணன்புதூரில் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் நினைவு கூறும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில், தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.

பின்னர், இந்த நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு மாணவி ஜனவிகா, தீரன் சின்னமலை குறித்த சாதனைகளையும், வாழ்க்கை நினைவுகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.

இதில் கோவில்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், அதிமுக நிர்வாகிகள் சதீஷ்குமார், சண்முகசுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், பிரகாஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் மத்தியில் நினைவு கூறும் வகையிலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் சுதந்திரப் போராட்ட தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் தனபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில், தீரன் சின்னமலை திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், இந்த நிகழ்ச்சியில் 11ஆம் வகுப்பு மாணவி ஜனவிகா, தீரன் சின்னமலை குறித்த சாதனைகளையும், வாழ்க்கை நினைவுகள் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இதில் கோவில்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார், அதிமுக நிர்வாகிகள் சதீஷ்குமார், சண்முகசுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், பிரகாஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.